தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு ... இ-விசா மூலம் இந்தியா வருபவர்களுக்கு இலவச சிம் கார்டு இ-விசா மூலம் இந்தியா வருபவர்களுக்கு இலவச சிம் கார்டு ...
சில நிமிடங்களில் ‘பான்’ எண் பெற விரைவில் மொபைல் ஆப் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2017
14:27

புதுடில்லி : 'ஆதார்’ எண் அடிப்படையில் சில நிமிடங்களில் வருமான வரி ‘பான்’ எண்ணை பெறும் திட்டத்தை வருமான வரித்துறை செயல்படுத்த உள்ளது.
அதுபோல், வருமான வரியை ஆன்லைனில் செலுத்த வசதியாக விரைவில் மொபைல் ஆப் அறிமுகம் ஆகிறது. வருமான வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை சார்பில் நிரந்தர கணக்கு எண் (பான்) அளிக்கப்படுகிறது. தற்போது, நாடு முழுவதும் 25 கோடி பேர் பான் கார்டு வைத்துள்ளனர். ஆண்டுதோறும் 2 கோடியே 50 லட்சம் பேர், புதிதாக பான் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய வடிவிலான பான் கார்டுகளை கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் வருமான வரித்துறை வழங்கி வருகிறது. வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்துவதற்கும், எடுப்பதற்கும் ‘பான்’ எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் ஆகும். ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கத்துக்கு பொருள் வாங்கும்போதும் பான் எண்ணை குறிப்பிட வேண்டும். இந்நிலையில், ஒரு சில நிமிடங்களில் ‘பான்’ எண் பெறும் வசதியை வருமான வரித்துறை செயல்படுத்த உள்ளது. ‘ஆதார்’ கார்டுக்கு புகைப்படம் எடுக்கும்போது, விரல் ரேகை, கண்ணின் கருவிழி உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
சம்பந்தப்பட்ட நபர் எப்போது விரல் ரேகையை பதித்தாலும், அவரது பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக தெரிந்து விடும். இந்த வசதியை பயன்படுத்தி, ‘ஆதார்’ எண் அடிப்படையில் ஒருவரது விவரங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, சில நிமிடங்களிலேயே அவருக்கு ‘பான்’ எண் வழங்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம், எளிதாக பான் எண் பெற முடிவதால், இன்னும் ஏராளமானோரை வருமான வரி வளையத்துக்குள் கொண்டுவர முடியும் என்று வருமான வரித்துறை கருதுகிறது.
இதுதவிர, வருமான வரியை ஆன்லைனில் செலுத்த வசதியாக மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கும் பணியிலும் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களில் இந்த ‘ஆப்’பை பயன்படுத்தி, வருமான வரி செலுத்தலாம், புதிதாக ‘பான்’ கார்டுக்கு விண்ணப்பிக்கலாம், தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கு நிலவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)