பதிவு செய்த நாள்
18 பிப்2017
04:45
சென்னை : மகிந்திரா எலக்ட்ரிக் நிறுவனம், சென்னையில், ‘இ2ஓ பிளஸ்’ என்ற பேட்டரியில் இயங்கும், எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மகேஷ் பாபு கூறியதாவது: மகிந்திரா குழுமத்தைச் சேர்ந்த எங்கள் நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காத, பேட்டரியில் இயங்கக் கூடிய, எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மானியம், வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது.
தற்போது, மகிந்திரா எலக்ட்ரிக், ‘இ2ஓ பிளஸ்’ என்ற பெயரில், எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் பேட்டரி, அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது. காரை, ஒரு முறை, ‘சார்ஜ்’ செய்தால், 140 கி.மீ., துாரம் செல்லலாம். சென்னையில், இந்த காரின் விலை, 7.70 லட்சம் ரூபாய் என்றளவில் உள்ளது. காருக்கு, மூன்று ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கி.மீ., துாரத்துக்கு, ‘வாரன்டி’ வழங்கப்படும். வாடிக்கையாளர் விரும்பும் வகையில், நவீன வகையில், இந்த கார் உருவாக்கப்பட்டு உள்ளது. ‘மொபைல் ஆப்’ வாயிலாக, காரை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|