பதிவு செய்த நாள்
18 பிப்2017
04:46
மும்பை : எம்.சி.எக்ஸ்., நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:எஸ்.டி.ஐ.எக்ஸ்., எனப்படும், சிங்கப்பூர் வைர முதலீட்டு சந்தை, வைரங்களில் முதலீடு செய்வதற்கும், வர்த்தகம் புரிவதற்கும் உதவும், ஒரே சந்தையாக உள்ளது. இச்சந்தையுடன், ஆய்வு, தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், இணைந்து செயல்பட, எம்.சி.எக்ஸ்., முடிவு செய்துள்ளது. மும்பையில் நடைபெற்ற விழாவில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. எம்.சி.எக்ஸ்., நிர்வாக இயக்குனர் மிருகன்க் பரன்ஜபி மற்றும் எஸ்.டி.ஐ.எக்ஸ்., தலைமை செயல் அதிகாரி லினஸ் கோ, ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
வைரக் கற்களை நறுக்குவது, பட்டை தீட்டுவது உள்ளிட்ட வர்த்தகத்தில், உலகின் மிகப் பெரிய மையமாக, இந்தியா விளங்குகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், எம்.சி.எக்ஸ்., – எஸ்.டி.ஐ.எக்ஸ்., நிறுவனங்களின் பரஸ்பர ஒத்துழைப்பு மேம்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|