பதிவு செய்த நாள்
18 பிப்2017
04:47
மும்பை : ரயில் யாத்ரி டாட் இன் நிறுவனம், ரயில் பயணத்தின் போது, பயணிகளின் குழந்தைகளுக்கு, சூடான பாலை வினியோகம் செய்யும் சேவையை துவங்கி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனிஷ் ரதி கூறியதாவது: ரயில் யாத்ரி, ‘ஆப்’ மூலம், பால் ஆர்டர் செய்யலாம். அதன்பின், சூடான, சுகாதாரமான பால் பிரத்யேக முறையில் அடைக்கப்பட்டு, அனுமதி பெற்ற ரயில் நிலையங்கள் வாயிலாக வினியோகம் செய்யப்படும். இந்த சேவையில், பயணிகளுக்கு, நேரடியாகவே, அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து பால் வழங்கப்படும். ரயிலில் இருந்து இறங்க வேண்டிய அவசியம் இல்லை.
வழக்கமாக, ரயிலில் கைக் குழந்தையுடன், பெற்றோர் பயணிக்கும் போது, பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. சிலர், ரயில் தாமதத்தாலும், ஞாபக மறதியாலும், குழந்தைகளின் உணவுப் பொருட்களை மறந்து விடுகின்றனர். எங்களின் இந்த முயற்சி, நிச்சயமாக, அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என, நம்புகிறோம். ஆய்வொன்றில், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ரயில்களில், குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட, உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை என, தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|