பதிவு செய்த நாள்
19 பிப்2017
02:27
கோல்கட்டா : பங்குகளை வெளியிட்டு, 1,200 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டும் முயற்சியில், பாரத் ரோடு நெட்வொர்க்ஸ் நிறுவனம் இறங்கி இருக்கிறது. இதையடுத்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம், பங்கு வெளியீட்டுக்காக விண்ணப்பித்து உள்ளது.பாரத் ரோடு நெட்வொர்க்ஸ் சாலைகள் போடுவது, பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக, நெடுஞ்சாலைத் துறை திட்டங்களுக்காக, பல்வேறு பணிகளை செய்து வருகிறது. 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட, 29.30 லட்சம் பங்குகளை, இந்நிறுவனம் வெளியிட இருக்கிறது. முகமதிப்பு, 10 ரூபாயாக இருப்பினும், இறுதி விலை பின் முடிவு செய்யப்படும். பங்கு வெளியீட்டின் மூலமாக திரட்டப்படும் நிதியை, தன் துணை நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக, கடனாக வழங்க இருக்கிறது.பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.என்.ஜி.ஏ., கேபிட்டல், இன்வெஸ்டெக் கேபிட்டல் சர்வீசஸ், ஸ்ரீ கேபிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|