பதிவு செய்த நாள்
19 பிப்2017
02:27
புதுடில்லி : பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ், கடந்த நிதியாண்டில், 4,600 கோடி ரூபாய் விற்றுமுதலை ஈட்டியுள்ளது.பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம், வரும் ஆண்டில், 5,000 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்ட திட்டமிட்டு உள்ளது. இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், எங்கள் நிறுவனம், 29.71 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட, 17.47 சதவீதம் அதிகம். இதே காலத்தில், மொத்த வருவாய், 7.05 சதவீதம் குறைந்து, 1,055.09 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டில், பஜாஜ் எலக்ட்ரிக்கல்சின் விற்றுமுதல், 4,600 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இது, வரும் நிதிஆண்டில், 5,000 கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பு; எல்.இ.டி., பல்பு விற்பனை சரிவு போன்ற காரணங்களால், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாடு மந்தமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|