‘பட்டு உற்­பத்­தியில் இந்­தியா தன்­னி­றைவு அடையும்’‘பட்டு உற்­பத்­தியில் இந்­தியா தன்­னி­றைவு அடையும்’ ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் - நிப்டி 8900 புள்ளிகளில் வர்த்தகம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் - நிப்டி 8900 புள்ளிகளில் வர்த்தகம் ...
7வது ஊதிய குழு பரிந்­து­ரையின் சீராய்வு முடிந்­தது; மத்­திய அரசு ஊழி­யர்கள் ‘அலவன்ஸ்’ உய­ரு­கி­றது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2017
23:54

புது­டில்லி : மத்­திய அரசு ஊழி­யர்­களின், ‘அலவன்ஸ்’ தொடர்­பாக, ஏழா­வது ஊதியக் குழு அளித்­துள்ள பரிந்­து­ரையை, சீராய்வு செய்யும் பணி முடி­வ­டைந்து உள்­ளது. இதை­ய­டுத்து, புதிய அலவன்ஸ் மற்றும் அலவன்ஸ் உயர்வு குறித்த அறி­விப்பை, மத்­திய அரசு விரைவில் வெளி­யிடும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதனால், 47 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்­திய அரசு ஊழி­யர்கள் பய­ன­டைவர்.
மத்­திய அரசு ஊழி­யர்­களின் ஊதிய உயர்வு தொடர்­பாக, ஏழா­வது ஊதியக் குழு அளித்த பரிந்­து­ரைக்கு, 2016 ஜூன், 29ல், மத்­திய அமைச்­ச­ரவைக் குழு ஒப்­புதல் வழங்­கி­யது. அதே சமயம், அலவன்ஸ் குறித்த பரிந்­து­ரைகள் மீது மட்டும் முடிவு எடுக்­காமல், ஒத்தி வைத்­தது. இதை­ய­டுத்து, அலவன்ஸ் தொடர்­பான பரிந்­து­ரை­களை சீராய்வு செய்ய, நிதித் துறை செயலர் அசோக் லாவாசா தலை­மையில், குழு அமைக்­கப்­பட்­டது. இக்­குழு, ஏழா­வது ஊதியக் குழு தெரி­வித்த, அலவன்ஸ் பரிந்­து­ரை­களை சீராய்வு செய்யும் பணியை மேற்­கொண்டு வந்­தது. தற்­போது, இப்­ப­ணிகள் முடி­வ­டைந்து விட்­ட­தாக தகவல் வெளி­யாகி உள்­ளது.
உ.பி., – மணிப்பூர் உள்­ளிட்ட மாநி­லங்­களில் தேர்தல் நடை­பெற்று வரு­வதால், புதிய அலவன்ஸ் குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை, மத்­திய அரசு வெளி­யி­டாமல் ஒத்தி வைத்­துள்­ளது. ‘மார்ச், 11ல், தேர்தல் முடி­வுகள் வெளி­யான பின், மத்­திய அரசு ஊழி­யர்­க­ளுக்­கான புதிய அலவன்ஸ், அலவன்ஸ் உயர்வு ஆகி­யவை குறித்த அறி­விப்பு வெளி­யாகும்’ என, அரசு உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது: ஏழா­வது ஊதியக் குழு, நடை­மு­றையில் உள்ள, 193 வகை­யான அல­வன்­சு­களை ஆராய்ந்­தது; அவற்றில், 51 அல­வன்­சு­களை நீக்­கவும், 37 அல­வன்­சு­களை சீரமைக்கவும், மத்­திய அர­சுக்கு பரிந்­து­ரைத்து இருந்­தது. இப்­ப­ரிந்­து­ரையை, அசோக் லாவாசா குழு, சீராய்வு செய்து முடித்­துள்­ளது. இக்­குழு, மத்­திய அரசு ஊழி­யர்­களின் வீட்டு வாடகை, பயண அலவன்ஸ் ஆகி­ய­வற்றை, கணி­ச­மாக உயர்த்த பரிந்­து­ரைத்­துள்­ள­தாக தெரி­கி­றது. மத்­திய அரசின் அறி­விப்­பிற்கு பின், புதிய அலவன்ஸ் நடை­முறை, வரும் ஏப்., முதல் அம­லுக்கு வரும். இவ்­வாறு அவர் கூறினார்.
அதி­க­ரிப்பு:நடப்பு நிதி­யாண்டு பட்­ஜெட்டில், மத்­திய அரசு ஊழி­யர்­களின் அலவன்ஸ் செல­வி­னங்­க­ளுக்கு, 64,677 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டது. இது, 2017 – 18ம் நிதி­யாண்­டிற்கு, 69,222 கோடி ரூபா­யாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது. இதே காலத்தில், பயண அலவன்ஸ், 4,323 கோடி ரூபாயில் இருந்து, 4,714 கோடி ரூபா­யாக அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது. வரும் நிதி­யாண்டில், பயண அலவன்ஸ் தவிர்த்து, இதர அல­வன்­சு­க­ளுக்­கான ஒதுக்­கீடு, 7 சத­வீதம் உயர்த்­தப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)