டொனால்டு டிரம்பை சந்­திக்­கி­றது ‘நாஸ்காம்’ குழுடொனால்டு டிரம்பை சந்­திக்­கி­றது ‘நாஸ்காம்’ குழு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு ...
நேரடி விற்­பனை துறையின் வளர்ச்சி; 3 மடங்கு அதி­க­ரிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2017
20:40

புது­டில்லி : ‘நேரடி விற்­பனை துறையின் வளர்ச்சி, 2024 – 25ம் நிதி­ஆண்டில், தற்­போது உள்­ளதை விட, மூன்று மடங்கு அதி­க­ரிக்கும்’ என, ஆய்­வொன்றில் தெரிய வந்­துள்­ளது.
ஒரு நிறு­வனம், அதன் தயா­ரிப்பு­ களை, மொத்த வியா­பா­ரிகள், சில்­லரை விற்­ப­னை­யா­ளர்கள் ஆகியோர் மூலம் விற்­காமல், நேர­டி­யாக நுகர்­வோ­ருக்கு விற்­பனை செய்­வது, நேரடி விற்­பனை முறை எனப்­ப­டு­கி­றது. இந்­தி­யாவில், ‘ஆம்வே, ஓரி­பிளேம், ஏவொன், ஹெர்­பலைப்’ போன்ற பல நிறு­வ­னங்கள், நேரடி விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கின்­றன.
வளர்ச்சிஇந்­திய நேரடி விற்­பனை நிறு­வ­னங்கள் கூட்­ட­மைப்பு, பி.எச்.டி., வர்த்­தகம் மற்றும் தொழில் கூட்­ட­மைப்பு இணைந்து, நேரடி விற்­பனை துறையின் வளர்ச்சி குறித்த ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்டு உள்­ளன.
அதன் விபரம்:கடந்த, 2015 – 16ம் நிதி­ஆண்டில், நேரடி விற்­பனை துறையின் ஒட்­டு­மொத்த விற்­பனை, 4.4 சத­வீதம் அதி­க­ரித்து, 8,308.50 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது; இது, 2014 – 15ல், 7,958.30 கோடி ரூபா­யாக இருந்­தது. எனினும், இதற்கு முந்­தைய நிதி­யாண்­டு­க­ளுடன் ஒப்­பிடும் போது, இத்­து­றையின் வளர்ச்சி விகிதம், மிகக் குறை­வா­கவே உள்­ளது. இதற்கு, நேரடி விற்­பனை துறை விதி­மு­றை­களில் தெளி­வின்மை; உரிமம் பெறு­வதில் கால தாமதம்; சில நிறு­வ­னங்­களின் முறை­கே­டான வர்த்­தகம். அதனால், வாடிக்­கை­யா­ளர்­களின் நம்­பிக்­கையை இழந்­தது போன்ற கார­ணங்­களை கூறலாம். மேலும், பாரம்­ப­ரிய வர்த்­த­கத்தை விட, நேரடி விற்­ப­னைக்கு அதிகம் செல­விட வேண்­டிய நிலையும், பொரு­ளா­தார மந்த நிலையால், மக்­களின் தேவைகள் குறைந்­ததும், துறையின் வளர்ச்சி சரிய வழி­வ­குத்­தது.
விழிப்புணர்வுஇத்­த­கைய சூழலில், நேரடி விற்­பனை துறையின் சீரிய வளர்ச்­சிக்கு துணை புரியும் வகையில், மத்­திய அரசு, 2016 செப்­டம்­பரில், ஒழுங்­கு­முறை கொள்­கையை வெளி­யிட்­டது. இது, நேரடி விற்­பனை துறையில் காணப்­பட்ட குழப்­பங்­க­ளுக்கு எல்லாம் முடிவு கட்டி, வளர்ச்­சிக்கு வழி­காட்டி உள்­ளது. இதனால், நேரடி விற்­பனை என்ற பெயரில் நடை­பெற்று வந்த, சட்ட விரோத விற்­பனை தடுக்­கப்­பட்டு உள்­ளது. நேரடி விற்­பனை குறித்த விழிப்­பு­ணர்வு அதி­க­ரித்து, வாடிக்­கை­யா­ளர்கள் எண்­ணிக்கை பெரு­கி­யுள்­ளது. இத்­த­கைய அம்­சங்கள் கார­ண­மாக, நேரடி விற்­ப­னையில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­களின் விற்­பனை, சிறப்­பாக வளர்ச்சி கண்டு, 2024 – 25ம் நிதி­யாண்டில், 25,826 கோடி ரூபா­யாக அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுஉள்­ளது.
முத­லிடம் கடந்த, 2015 – 16ம் நிதி­ஆண்டில், ஒட்­டு­மொத்த நேரடி விற்­ப­னையில், வடக்கு பிராந்­தியம், 30 சத­வீத பங்­க­ளிப்­புடன், 2,493 கோடி ரூபாய் திரட்டி முத­லி­டத்தை பிடித்­து உள்­ளது.தென் பிராந்­தியம், 21 சத­வீத பங்­க­ளிப்­புடன், 1,579 கோடி ரூபாய் ஈட்­டி­யுள்­ளது. கிழக்கு மற்றும் மேற்கு பிராந்­தி­யங்கள், முறையே, 19 சத­வீதம் மற்றும் 17 சத­வீத விற்­பனை வளர்ச்­சியை கண்­டுள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)