பதிவு செய்த நாள்
25 பிப்2017
04:33
புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனம், அதன் சட்ட விதிகளில் திருத்தம் செய்து, 2013ம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு, இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, பங்கு முதலீட்டாளர்களிடம் ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது.
புதிய விதிகளில், பங்குகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்திடம், 2016 டிசம்பர் இறுதி நிலவரப்படி, 37,697 கோடி ரூபாய் மதிப்பிற்கு, ரொக்கம் மற்றும் முதலீடுகள் உள்ளன. இதில், குறிப்பிட்ட அளவிலான தொகையை, டிவிடெண்டாக வழங்க வேண்டும் அல்லது பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என, பங்கு முதலீட்டாளர்கள் கோரி வருகின்றனர்.இதையடுத்து, இன்போசிஸ் நிறுவனம், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளை திரும்பப் பெற திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக, நிறுவனத்தின் சட்ட விதிகளில் திருத்தம் செய்து, புதிய விதிமுறையை செயல்பாட்டிற்கு கொண்டு வர, இன்போசிஸ் முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|