பதிவு செய்த நாள்
25 பிப்2017
04:34
புதுடில்லி : எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடன், அதன் ஐந்து துணை வங்கிகள், ஏப்., 1ல் இணைகின்றன. இது, இந்திய வங்கி வரலாற்றில், மிகப்பெரிய இணைப்பாகும்.
இதன்படி, எஸ்.பி.ஐ., உடன் அதன் துணை வங்கி களான, ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் ஆகியவை இணைக்கப்படுகின்றன. இதன் மூலம், 37 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், 22,500 கிளைகள், 58 ஆயிரம் ஏ.டி.எம்.,கள், 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியாக, எஸ்.பி.ஐ., உருவெடுக்கும்.
இணைய உள்ள வங்கி களின் இயக்குனர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் நீங்கலாக, அவற்றின் ஊழியர்கள் அனைவரும், எஸ்.பி.ஐ.,யில் ஐக்கியமாவர். எஸ்.பி.ஐ., உடன் இணையும் வங்கிகளில், ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய மூன்று வங்கிகள், பங்குச் சந்தை பட்டியலில் உள்ளன. அதனால், ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்ட் ஜெய்ப்பூர் வங்கியின், 10 ரூபாய் முகமதிப்பு உள்ள, 10 பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு, 1 ரூபாய் முகமதிப்பு உள்ள, எஸ்.பி.ஐ.,யின், 28 பங்குகள் வழங்கப்படும்.
அது போல, ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகியவற்றில், முறையே, 10 பங்குகளுக்கு, எஸ்.பி.ஐ.,யின் 22 பங்குகள் வழங்கப்படும். எஸ்.பி.ஐ., உடன் இணையும் ஐந்து வங்கிகளின் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் பெறும் ஊதியத்தில், எந்த மாற்றமும் இருக்காது என, வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|