பதிவு செய்த நாள்
26 பிப்2017
01:19
புதுடில்லி : அராகு காபியின், முதல் சில்லரை விற்பனை கடை, பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிசில் துவக்கப்பட்டுள்ளது. அராகு குளோபல் ஹோல்டிங்சில், ஆனந்த் மகிந்திரா, இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனம், முதல் சில்லரை காபி விற்பனை கடையை, பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் துவக்கியுள்ளது. இதை தொடர்ந்து, பல்வேறு நாடுகளில், காபி விற்பனையை துவக்க உள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், சர்வதேச அளவில், உயர்தர காபியை விற்பனை செய்ய உள்ளது. இதற்காக, இந்தியாவில், ஆந்திராவில் உள்ள அரக்குவேலி என்ற இடத்தில் விளைவிக்கப்படும் தரமான காபி பயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அராகு காபி விற்பனை மூலமாக, அங்கு வாழும் பழங்குடி மக்களும் பயனடைவர். முதல், சில்லரை விற்பனை கடை, பாரிசில் துவங்கப்பட்டுள்ளது. அடுத்து, பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் கடைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|