பதிவு செய்த நாள்
26 பிப்2017
01:19
புதுடில்லி : இந்த வாரம், ஆகாஷ் இன்பிரா புராஜெக்ட்ஸ், ஆர்.எம்.சி., சுவிட்ச் கியர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பிரிவின் கீழ், மூலதன சந்தையில் பங்குகளை வெளியிட உள்ளன. ஆகாஷ் இன்பிரா நிறுவனத்தின் பங்கு வெளியீடு, 28ல் துவங்கி, மார்ச், 6ல் முடிவடைகிறது. இந்நிறுவனம், பங்கு விற்பனை மூலம், 25.50 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது. ஆர்.எம்.சி., சுவிட்ச் கியர்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு, 28ல் துவங்கி, மார்ச், 3ல் முடிவடைகிறது. இந்நிறுவனம், பங்கு விற்பனை மூலம், 4.15 கோடி ரூபாய் திரட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இரு நிறுவனங்களும், அவற்றின் விரிவாக்கம், மூலதன தேவைகள் ஆகியவற்றுக்காக, பங்கு விற்பனையில் இறங்கியுள்ளன. இம்மாதம், ஏற்கனவே, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், ஐந்து நிறுவனங்கள், மூலதன சந்தையில் களமிறங்கி, பங்கு வெளியீடு மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|