பதிவு செய்த நாள்
28 பிப்2017
01:59
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு, தோல் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து, அம்மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா கூறியதாவது:எங்கள் மாநிலத்தில், தோல் உள்ளிட்ட தொழிற்சாலைகளை ஊக்குவிக்க, அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், கடந்த ஆண்டில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, தோல் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. அதில், ஏற்றுமதியின் பங்கு, 7,000 கோடி ரூபாய். அடுத்த இரு ஆண்டுகளில், தோல் பொருட்கள் உற்பத்தியை, 15 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தோல் தொழிலை ஊக்குவிக்க, மேற்கு வங்கத்தில், 1,100 ஏக்கரில், தனி பூங்கா ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு, தோல் சார்ந்த தொழில்கள் மட்டும் துவக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், மூன்று லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் உற்பத்தியாகும் தோல் பொருட்களுக்கு, ஜெர்மனி நாடு முக்கிய சந்தையாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|