பதிவு செய்த நாள்
28 பிப்2017
23:48
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனம், ஏஜன்டுகளுக்கு, ‘பாயின்ட் ஆப் சேல்’ எனும், பணம் செலுத்த உதவும் கருவி வழங்கி, அதன் மூலம், பிரீமிய தொகையை வசூலிக்க முடிவு செய்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த, ஒன்பது மாதங்களில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் மொத்த பிரீமிய வருவாய், 1.45 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 1.29 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு, 21.64 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 24.42 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எல்.ஐ.சி., நிறுவனத்திற்கு, 2016 மார்ச் நிலவரப்படி, நாடு முழுவதும், 20.16 லட்சம் ஏஜன்டுகள் உள்ளனர். அவர்கள், பாலிசிதாரர்களிடம் இருந்து, பிரீமியம் தொகையை வசூலித்து தருகின்றனர்.
மத்திய அரசு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்து வருவதையடுத்து, எல்.ஐ.சி., 1.50 லட்சம் ஏஜன்டுகளுக்கு, ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவிகளை வழங்கி, அதன் மூலம் பிரீமியத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளது. இந்த முறையின் மூலம் ஆண்டுக்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, எல்.ஐ.சி., முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|