பதிவு செய்த நாள்
28 பிப்2017
23:48
புதுடில்லி : ‘நாஸ்காம்’ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவில், ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., துறையில், தற்போது 39 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில், 34 சதவீதம் பேர், அதாவது, 13 லட்சம் பேர் பெண்கள். ஐ.டி., நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு கொள்கைகளில், பெண்களுக்கு ஏற்புடைய பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, விரும்பிய நேரத்தில் பணி செய்யும் வசதி, அலுவலகத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை, பயணப்படி, பிரசவ விடுப்பு, ஆரோக்கிய பராமரிப்பு வசதி போன்றவை காரணமாக, ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்ற பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தாண்டு, ஐ.டி., – பி.பி.ஓ., நிறுவனங்களில், பெண் மூத்த அதிகாரிகளின் பங்களிப்பு, 20 சதவீதத்தில் இருந்து, 60 சதவீதமாக உயரும். அத்துடன், 51 சதவீத நிறுவனங்களில், தலைமை அதிகாரி பொறுப்பில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் இடம் பெறுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|