பதிவு செய்த நாள்
01 மார்2017
17:16
மும்பை : நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதால் பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. சென்செக்ஸ் 230 புள்ளிகளும், நிப்டி 61 புள்ளிகளும் உயர்வுடன் ஆரம்பமான நிலையில் டிசம்பர் மாதத்திற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இருந்தாலும், முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டதாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும் நாள்முழுக்க பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 241.17 புள்ளிகள் உயர்ந்து 28,984.49-ஆகவும், நிப்டி 66.20 புள்ளிகள் உயர்ந்து 8,945.80-ஆகவும் நிறைவுற்றன. இதன்மூலம் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|