பதிவு செய்த நாள்
02 மார்2017
00:03
புதுடில்லி : கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் தயாரிப்பு துறையின் வளர்ச்சி நிலை குறித்த அறிக்கையை, நிக்கி மார்கிட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்: கடந்த பிப்ரவரியில், தயாரிப்பு துறைக்கான குறியீடு, 50.7 ஆக உயர்ந்துள்ளது. இது, ஜனவரியில், 50.4 ஆக இருந்தது. ஆக, தொடர்ந்து இரண்டு மாதங்களாக, தயாரிப்பு துறை, வளர்ச்சி கண்டுள்ளது. ஏற்றுமதி, உள்நாட்டு தேவைகள் அதிகரிப்பு காரணமாக, தயாரிப்பு துறை, வளர்ச்சி கண்டுள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், தயாரிப்பு நிறுவனங்களுக்கு, புதிய ஆர்டர்கள் அதிகம் கிடைத்துள்ளன. அதேசமயம், பணவீக்கம் காரணமாக, மூலப்பொருட்கள் செலவினம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, நவம்பர் 8ல், உயர் மதிப்பு கரன்சிகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தயாரிப்பு துறை சுணக்கம் கண்டது. இந்த நிலை மாறி, தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிஉள்ளதை, குறியீடு காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|