பதிவு செய்த நாள்
07 மார்2017
05:26
ராஜ்கோட் : பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த சில வங்கிகள், 4 – 5 முறைக்கு மேற்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைக்கு, ஏப்., 1 முதல், 150 ரூபாய் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.
இதற்கு, நாடு முழுவதும் வங்கி வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு, ராஜ்கோட் வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தலைவர் சமீர் ஷா, காட்டமாக கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விபரம்: பண மதிப்பு அறிவிப்பு வெளியாகி, நான்கு மாதங்கள் கழிந்த பின்னும், இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. சிறிய, நடுத்தர வியாபாரிகள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை. இந்நிலையில், வங்கிகள், நாளும், பொழுதுமாக அவ்வப்போது புதிய விதிமுறைகளை அறிவித்து வருகின்றன. வங்கிகள், அவற்றின் நிர்வாகச் செலவுகளையும், வாராக்கடன்களையும் குறைக்க வேண்டியது அவசியம் தான். அதற்காக, ரொக்கப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலித்து, வருவாயை பெருக்க நினைப்பது, மடத்தனம். இந்த திட்டத்தை, வங்கிகள் உடனே திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|