பதிவு செய்த நாள்
07 மார்2017
05:27
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் குழுமம், நிதி, காப்பீடு உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறது.
இக்குழுமத்தின் கீழ் உள்ள, ‘5பைசா கேப்பிடல்’ நிறுவனம், பங்குத் தரகு சேவை வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தை தனியே பிரித்து, பங்குச் சந்தையில் பட்டியலிட, ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள், 3 – 4 மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின், 25 பங்குகளுக்கு, 10 ரூபாய் முகமதிப்பு உள்ள, 5பைசா கேப்பிடல் நிறுவனத்தின் ஒரு பங்கு வீதம், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.இந்தியாவில், குறைந்த கட்டணத்தில் பங்குத் தரகு சேவை அளித்து வரும் நிறுவனங்களில், முதன்முறையாக, 5பைசா கேப்பிடல் நிறுவனம் பங்குச் சந்தை பட்டியலில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிறுவனத்தில், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ், 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|