பதிவு செய்த நாள்
07 மார்2017
05:30
புதுடில்லி : ‘பெரும்பான்மையான சிறு வியாபாரிகள், தங்கள் வர்த்தகத்தை மின்னணு முறைக்கு இன்னும் மாற்றாத தால், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தை, செப்., 1 வரை தள்ளி வைக்க வேண்டும்’ என, இந்திய வணிகர்கள் கூட்டமைப்பான, சி.ஏ.ஐ.டி., மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு, ஜி.எஸ்.டி., திட்டத்தை, ஜூலை, 1 முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. பல முனை வரிகளை ஒழித்து, நாடு முழுவதும் ஒரே வரி விகிதத்தை கொண்டு வரும் இந்த புதிய வரி விதிப்பு முறைக்கு, சிறு வியாபாரிகள் தயாராகவில்லை என, சி.ஏ.ஐ.டி., தெரிவித்துள்ளது.
பயிற்சிஇவ்வமைப்பின் செகரட்டரி ஜெனரல் பிரவீன் கந்தல்வால் கூறியதாவது:தொழில்நுட்பம் சார்ந்த, ஜி.எஸ்.டி., திட்டத்தை பின்பற்றுவதற்கு, ‘ஆன்லைன்’ எனப்படும், வலைதள பயன்பாடு அவசியம். இதன் காரணமாக, 2 கோடிக்கும் அதிகமான சிறு வணிகர்கள், தங்கள் வர்த்தக நடைமுறைகளுக்கு, கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.ஆனால், தற்போதைய நிலவரப்படி, 70 சதவீதத்திற்கும் அதிகமான சிறு வியாபாரிகள் இன்னும், கம்ப்யூட்டர் சார்ந்த, மின்னணு தொழில்நுட்பத்திற்கு, தங்கள் வர்த்தகத்தை மாற்றாமல் உள்ளனர்.
இத்தகைய சூழலில், வரும், 9 முதல், ஏப்., 12 வரை நடைபெறும், பார்லி.,யின் இரண்டாவது கூட்டத்தொடரில், மாதிரி ஜி.எஸ்.டி., சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜூலையில் அமல்படுத்தப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து சிறு வியாபாரிகளும், மின்னணு தொழில்நுட்பத்திற்கு மாறி, ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த, இந்த இரண்டு மாத அவகாசம் போதாது. வியாபாரிகள் தற்போது, ‘வாட்’ எனப்படும், மதிப்பு கூட்டப்பட்ட வரி திட்டத்தை பின்பற்றுகின்றனர். அவர்கள், ஜி.எஸ்.டி., நடைமுறையை புரிந்து கொண்டு, சுலபமாக அத்திட்டத்திற்கு மாற, போதிய பயிற்சியும், கால அவகாசமும் தேவை.
விழிப்புணர்வுஅதனால், ஜி.எஸ்.டி., அமலாக்கத்தை, செப்., 1க்கு தள்ளி வைக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில், மத்திய அரசு, அனைத்து வணிகர் சங்கங்களை ஒன்றிணைத்து, வியாபாரிகளுக்கு, ஜி.எஸ்.டி., குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.ஜி.எஸ்.டி., தொடர்பான வியாபாரிகளின் அனைத்து சந்தேகங்களையும், மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
‘வாபஸ்’ பெற வேண்டும்மாநிலங்கள் இடையிலான வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு, ‘இ – பெர்மிட்’ எனப்படும், மின்னணு அனுமதி பெறும் திட்டம், ‘ஒரே நாடு – ஒரே வரி’ என்ற, ஜி.எஸ்.டி., நோக்கத்தையே அழித்துவிடும். ஜி.எஸ்.டி., திட்டத்தின் கீழ், மாநிலங்கள் இடையிலான ஒவ்வொரு சரக்கு பரிவர்த்தனையையும், அரசு கண்காணிக்க முடியும். அப்படிப்பட்ட சூழலில், ‘இ – பெர்மிட்’ தேவையில்லை என்பதே, வியாபாரிகளின் கருத்து. அதை, மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். -பிரவீன் கந்தல்வால், செகரட்டரி ஜெனரல், சி.ஏ.ஐ.டி.,
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|