பதிவு செய்த நாள்
08 மார்2017
04:45
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு பிரீமியத்தை, 50 சதவீதம் வரை உயர்த்த பரிந்துரைத்து உள்ளது, ஐ.ஆர்.டி.ஏ., எனும் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்.
விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாகனங்கள் சேதமடைகின்றன. அது போன்ற சமயங்களில் வாகனங்களுக்கு இழப்பீடு பெறுவதற்காக, அதன் உரிமையாளர்கள், காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு செய்வர். அப்படி காப்பீடு செய்வதற்கான பிரிமீயம் தொகை, அவ்வப்போது மாறுதலுக்கு உள்ளாகும். அந்த வகையில், வரும் நிதியாண்டில், மோட்டார் வாகன காப்பீட்டு பிரீமியம், 50 சதவீதம் வரை உயரும் என, தெரிகிறது.
அதன்படி, 1,000 – 1,500 சிசி திறன் உள்ள, எஸ்.யு.வி., வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு, 50 சதவீதம் உயர்த்தப்படும் என, தெரிகிறது. 1,000 சிசி திறனுக்கு கீழ் உள்ள, சிறிய கார்களின் மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் உயர்த்தப்படாது என, சொல்லப்படுகிறது. 75 சிசி திறனுக்கு கீழ் உள்ள, இருசக்கர வாகனங்களின், மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியமும் உயராது என, தகவல் வெளியாகி உள்ளது. 350 சிசி திறனுக்கு மேல் உள்ள, ‘ஸ்போர்ட்ஸ், சூப்பர்’ இருசக்கர வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியம், 796 ரூபாயில் இருந்து, 1,194 ரூபாயாக உயர வாய்ப்புள்ளது. ஆறு குதிரை திறனுடைய, டிராக்டர்களுக்கான பிரீமியம், 510 ரூபாயில் இருந்து, 765 ரூபாயாக உயர உள்ளது. இந்த உயர்வு, ஏப்., 1ல் இருந்து அமலுக்கு வரும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|