பதிவு செய்த நாள்
08 மார்2017
04:46
புதுடில்லி : வரும் செப்டம்பரில், இந்தியாவில், முதன்முறையாக நடக்கவிருக்கும், சர்வதேச மொபைல் போன் மாநாட்டுக்கு, ஜி.எஸ்.எம்.ஏ., கூட்டமைப்பு ஒத்துழைப்பு தர மறுத்துள்ளது.
சமீபத்தில், இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பின் இயக்குனர், ஜெனரல் ராஜன் எஸ்.மேத்யூஸ் கூறுகையில், ‘தென் கிழக்கு ஆசிய சந்தைகளை குறிவைத்து, முதன்முறையாக, இந்தியாவில், மொபைல் போன் மாநாட்டை நடத்த உள்ளோம். இதற்கு, சர்வதேச மொபைல் போன் நிறுவனங்களின் கூட்டமைப்பான, ஜி.எஸ்.எம்.ஏ., ஆதரவளிக்கும்’ என, தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியா நடத்த உள்ள மாநாட்டிற்கு ஒத்துழைப்பு தர, ஜி.எஸ்.எம்.ஏ., மறுப்பு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.எம்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில், வரும் செப்டம்பரில் நடக்க உள்ள, சர்வதேச மொபைல் போன் மாநாட்டிற்கு, ஒத்துழைப்பு வழங்க மாட்டோம்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.எம்.ஏ., மொபைல் போன் தொடர்பாக, ஏற்கனவே, பல நாடுகளில் மாநாடுகளை நடத்தியுள்ளது. மேலும், வரும் நவம்பரில், டில்லியில், ‘மொபைல் 360 – இந்தியா’ எனும் மாநாட்டை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|