பதிவு செய்த நாள்
08 மார்2017
04:47
புதுடில்லி : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நிறுவனங்கள், சுலபமாக தொழில் துவங்க வசதியாக, ‘டிரேட் மார்க்’ எனப்படும் வணிகச் சின்னம் கோரி விண்ணப்பிக்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி, வணிகச் சின்னத்திற்கான உரிமம் பெறுவதற்கு, தற்போதுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 74ல் இருந்து, 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், வணிகச் சின்னம் கோரி, ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிப்பதற்கான கட்டணமும், 8,000 ரூபாயில் இருந்து, 4,500 ரூபாயாக குறைத்து, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காகித விண்ணப்பங்களை விட, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கட்டணம், 10 சதவீதம் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வணிக சின்னம் தொடர்பான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, முடிவெடுப்பதற்கான கெடு, 13 மாதங்களில் இருந்து, ஒரு மாதமாக ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால், நிறுவனங்கள், விரைவாக, அறிவு சார் சொத்துரிமை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|