பதிவு செய்த நாள்
08 மார்2017
04:47
புதுடில்லி : பி.எஸ்.இ., என, சுருக்கமாக அழைக்கப்படும் மும்பை பங்குச் சந்தையின், சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான, எஸ்.எம்.இ., பங்குச் சந்தையின் தலைவர் அஜய் தாக்குர் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டு களாக செயல்பட்டு வரும், எஸ்.எம்.இ., பங்குச் சந்தையில், தற்போது, 165 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இவை, பங்குகளை வெளியிட்டு, 1,288 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு, 19 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இம்மாத இறுதிக்குள், மேலும், 10 நிறுவனங்கள் பட்டியலில் இணைய உள்ளன.
இதையடுத்து, மேலும், 10 நிறுவனங்கள் பங்கு வெளியீடு மேற்கொள்ள உள்ளன. இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், வரும் ஜூன் மாதத்தில், எஸ்.எம்.இ., பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை, 200 ஆக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம், 3 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பு உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள், இப்பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|