பதிவு செய்த நாள்
08 மார்2017
23:56
மும்பை : கோத்ரெஜ் அப்ளையன்ஸ், ‘ஏசி’ சாதனங்களின் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
கோத்ரெஜ் குழுமத்தைச் சேர்ந்த, கோத்ரெஜ் அப்ளையன்ஸ், வீட்டு நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கோடை காலத்தில், ‘ஏசி’ சாதனங்கள் சந்தையில், கோத்ரெஜ், 20 சதவீத பங்கை பிடிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி கமல் நந்தி கூறியதாவது:இந்தியாவில், ஐந்து நட்சத்திர திறன் கொண்ட, ‘ஏசி’ சாதனங்களின் சந்தை, 50 லட்சம் என்றளவில் உள்ளது. நாட்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘ஏசி’ சாதனங்கள் சந்தையில், ஐந்து நட்சத்திர திறனுள்ள, ‘ஏசி’ சாதனங்களின் பங்கு, 22 சதவீதமாக உள்ளது. இது, ஆண்டுதோறும், 40 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இன்வெர்ட்டருடன் கூடிய, ‘ஏசி’ சாதனங்களின் தேவையும் உயர்ந்து வருகிறது.
எங்கள் நிறுவனத்தின் மொத்த வருவாயில், ‘ஏசி’ சாதனங்கள் மூலம் கிடைக்கும் வருவாயின் பங்கு, 24 சதவீதம் என்றளவில் உள்ளது. கோடை காலம் துவங்க உள்ளதால், புதிய, ‘ஏசி’ சாதனங்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் மூலம், ‘ஏசி’ சந்தையில், எங்கள் பங்கு உயரும். வரும் நிதியாண்டில், 4,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|