பதிவு செய்த நாள்
08 மார்2017
23:56
ஈரோடு : ‘அமெரிக்க முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கி உள்ளதால், சர்வதேச அளவில், விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, ஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சங்க செயலர் தர்மராஜ் கூறியதாவது: அமெரிக்காவின் ரிசர்வ் வங்கியான, பெடரல் வங்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்நாட்டின் முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்தி, எதில் முதலீடு செய்ய வேண்டும் என, அறிவுரை வழங்கும். கடந்த டிசம்பரில் நடந்த பெடரல் வங்கி மூதலீட்டாளர்கள் கூட்டத்தில், தங்கத்தின் மதிப்பு உயர்ந்து வருவதால், தங்கத்தில் முதலீடு செய்யுமாறு அறிவுரை வழங்கியது.
இதையடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கி உள்ளனர். இதனால், உலகம் முழுவதும் தங்க வர்த்தகத்தில் கொள்முதல் செய்வோர் எண்ணிக்கை பெருகி, விலை உயரத் துவங்கி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, மும்பை, சென்னை மார்க்கெட் நிலவரப்படி, கடந்த ஜனவரியில், ஒரு கிராம், 2,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 80 ரூபாய் விலை உயர்ந்து, 2,780 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சராசரியாக ஒரு சவரனுக்கு, 650 ரூபாய் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|