பதிவு செய்த நாள்
08 மார்2017
23:57
சென்னை : கார் பழுது பார்ப்பு சேவையில் ஈடுபட்டுள்ள, மை டி.வி.எஸ்., நிறுவனம், அதன் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக, கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில், கால் பதிக்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் ஆட்டோ மொபைல் பிரிவின் தலைவர் வினய் பிபர்சனியா கூறியதாவது: இந்தியாவில், அடுத்த இரு ஆண்டுகளில், நிறுவனத்தின் வணிகத்தை இரு மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இதனால், கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில், சேவையை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம், நிறுவனத்தின் லாபத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளோம். நிறுவனம், கடந்த இரு நாட்களில், தமிழகத்தில், 3; ஆந்திராவில், 2; கர்நாடகாவில், 1; கேரளாவில், 1 என, மொத்தம் ஏழு வாகன சேவை மையங்களை திறந்து, அவற்றின் எண்ணிக்கையை 330 ஆக அதிகரித்துள்ளது. மேலும், விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 100 புதிய பழுது பார்ப்பு சேவை மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|