பதிவு செய்த நாள்
08 மார்2017
23:59
மும்பை : ‘நாடு முழுவதும் பருவ மழை பரவலாக பெய்ததால், டிராக்டர்களுக்கான தேவை அதிகரிக்க துவங்கிஉள்ளது. அதனால், கடந்த இரு நிதியாண்டுகளாக, வளர்ச்சியில், இரட்டை இலக்க பின்னடைவை கண்டு வந்த, டிராக்டர் விற்பனை, நடப்பு நிதியாண்டில், 16 – 17 சதவீதம் வளர்ச்சி காணும்’ என, ‘கிரிசில்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் விபரம்: பருவமழை தவறியதால், 2014 – 16ம் நிதியாண்டுகளில், டிராக்டர் துறை, விற்பனை வளர்ச்சியில், இரட்டை இலக்க பின்னடைவைக் கண்டது.கடந்த ஆண்டு, தென்மேற்கு பருவழை நன்கு இருந்ததால், கரீப் பயிர்கள் உற்பத்தியும், ரபி பருவ நடவும் அதிகரித்துள்ளன. இதனால், டிராக்டர்களுக்கான தேவை, நடப்பு நிதியாண்டில், ஏப்., – அக்., வரையிலான ஏழு மாதங்களில், 26 சதவீதம் அதிகரித்தது. தசரா, தீபாவளி பண்டிகைகள் காரணமாக, டிராக்டர் விற்பனை, அக்டோபரில், 44 சதவீதம் உயர்ந்தது.
நவம்பரில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், டிராக்டர் விற்பனை பாதிக்கப்பட்டது. கிராமப்புறங்களில், ரொக்கப் பயன்பாடு அதிகம் என்பதால், இத்தகைய பாதிப்பு ஏற்பட்டது. டிராக்டர் கடன் வசூல் குறைந்ததால், புதிய டிராக்டர்களுக்கு கடன் வழங்குவது சரிந்து, விற்பனை மந்தமானது. இத்தகைய பாதிப்பை ஈடு செய்யும் விதத்தில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், டிராக்டர் விற்பனை இருந்தது.
தற்போது, இயல்பு நிலை திரும்பி வருவதால், நடப்பு நிதியாண்டில், டிராக்டர் விற்பனை வளர்ச்சி விகிதம், 16 – 18 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|