பதிவு செய்த நாள்
09 மார்2017
10:49
புதுடில்லி : "பிரதான் மந்திரி கரீப் கல்யாண்" எனப்படும் வரி பொதுமன்னிப்பு திட்டத்தின் கீழ் கறுப்பு பணம் பதுக்கி இருப்போர் அனைவரும் நேர்மையாக தங்களின் வருமானத்திற்கு கணக்கு காட்ட வேண்டும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
அப்படி கணக்கு காட்டாதவர்களுக்கு 77.25 சதவீதம் வட்டி மற்றும் அபராதத்துடன் தண்டனையும் வழங்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பத்திரிக்கைகளிலும் வருமான வரித்துறை சார்பில் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை இறுதி வாய்ப்பாக எடுத்துக் கொண்டு கறுப்பு பணம் வைத்திருப்போர் தங்களின் வருமானத்திற்கு நேர்மையாக கணக்கு காட்ட வேண்டும் என வருமான வரித்துறை அதன் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்ட வந்த பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின்படி, கணக்கில் வராத பணம் வைத்திருப்போர் தங்களின் பணத்தை கையில் வைத்திருந்தாலோ அல்லது கணக்கில் வங்கிகளில் டெபாசிட் செய்திருந்தாலோ அல்லது தபால் அலுவலகங்களில் சேமித்து வைத்திருந்தாலோ அவர்கள் தானாக முன்வந்து தங்களின் கணக்கை ஒப்படைத்தால் அவர்களிடம் வரியுடன், 49.90 சதவீதம் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படும்.
2017 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதிக்குள் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் சொத்துக்களுக்கு கணக்கு காட்டி, வரி செலுத்த வேண்டும். வருமான வரித்துறையால் கணக்கில் வராத சொத்துக்கள் அல்லது கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டால் 77.25 சதவீதம் வரை வட்டி, அபராத தொகை செலுத்துவதுடன் தண்டனையும் பெற வேண்டும் என வருமான வரித்துறை எச்சரித்தள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|