ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 66.83ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 66.83 ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு ...
நேர்மையாக கணக்கு காட்டுங்கள் : வருமான வரித்துறை இறுதி எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2017
10:49

புதுடில்லி : "பிரதான் மந்திரி கரீப் கல்யாண்" எனப்படும் வரி பொதுமன்னிப்பு திட்டத்தின் கீழ் கறுப்பு பணம் பதுக்கி இருப்போர் அனைவரும் நேர்மையாக தங்களின் வருமானத்திற்கு கணக்கு காட்ட வேண்டும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
அப்படி கணக்கு காட்டாதவர்களுக்கு 77.25 சதவீதம் வட்டி மற்றும் அபராதத்துடன் தண்டனையும் வழங்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பத்திரிக்கைகளிலும் வருமான வரித்துறை சார்பில் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை இறுதி வாய்ப்பாக எடுத்துக் கொண்டு கறுப்பு பணம் வைத்திருப்போர் தங்களின் வருமானத்திற்கு நேர்மையாக கணக்கு காட்ட வேண்டும் என வருமான வரித்துறை அதன் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்ட வந்த பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின்படி, கணக்கில் வராத பணம் வைத்திருப்போர் தங்களின் பணத்தை கையில் வைத்திருந்தாலோ அல்லது கணக்கில் வங்கிகளில் டெபாசிட் செய்திருந்தாலோ அல்லது தபால் அலுவலகங்களில் சேமித்து வைத்திருந்தாலோ அவர்கள் தானாக முன்வந்து தங்களின் கணக்கை ஒப்படைத்தால் அவர்களிடம் வரியுடன், 49.90 சதவீதம் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படும்.
2017 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதிக்குள் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் சொத்துக்களுக்கு கணக்கு காட்டி, வரி செலுத்த வேண்டும். வருமான வரித்துறையால் கணக்கில் வராத சொத்துக்கள் அல்லது கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டால் 77.25 சதவீதம் வரை வட்டி, அபராத தொகை செலுத்துவதுடன் தண்டனையும் பெற வேண்டும் என வருமான வரித்துறை எச்சரித்தள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)