ஓய்வூதிய தொகைக்கு 8 சதவீதம் வட்டிஓய்வூதிய தொகைக்கு 8 சதவீதம் வட்டி ... மாலைநேர நிலவரம் : பெரிய அளவில் மாற்றமின்றி முடிந்த தங்கம் விலை மாலைநேர நிலவரம் : பெரிய அளவில் மாற்றமின்றி முடிந்த தங்கம் விலை ...
அறிமுகத்திற்கு முன்பே துவங்கிய சாம்சங் கேலக்சி எஸ்8 முன்பதிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2017
15:26

லண்டன் : சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஸ் 8 விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மார்ச் 29 ஆம் தேதி சாம்சங் நடத்த திட்டமிட்டுள்ள விழாவில் சாம்சங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்போனின் முன்பதிவு லண்டனின் பிரபல ஆன்லைன் விற்பனை தளத்தில் துவங்கப்பட்டுள்ளது. அதன் படி 64 ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எஸ் 8 இந்திய மதிப்பில் ரூ.64,900 என்ற விலையில் முன்பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கேலக்ஸி எஸ் 8 பிளஸ் மாடல் விலை இதை விட அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டன் இணையதளத்தில் முன்பதிவிற்கு பட்டியலிடப்பட்டுள்ள கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில், 5.8 இன்ச் QHD 1440x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம். இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமராவும், 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இன்டெர்னல் மெமரியுடன், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில் கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் கேலக்ஸி எஸ் 8 சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் சாம்சங் சார்பில் மார்ச் 29 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) என்ற விழா நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்படும் முன் முன்பதிவுக்கு பட்டியலிடப்பட்டது குறித்து சாம்சங் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)