பதிவு செய்த நாள்
09 மார்2017
15:58
மும்பை : கடந்த 2 நாட்களாக சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்றைய பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிவிலிருந்து மீண்டன. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் உயர்மட்டக் குழு கூட்டம் நாளை (மார்ச் 10) நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதன் காரணமாக ஆட்டோமொபைல் மற்றும் வங்கித்துறை நிறுவன பங்குகள் உயர்ந்தன. இதன் காரணமாக பிற்பகல் வர்த்தகத்தின் போது, இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளன. நிப்டி மீண்டும் 8900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 27.19 புள்ளிகள் உயர்ந்து 28,929.13 புள்ளிகளாகவும், நிப்டி 2.70 புள்ளிகள் உயர்ந்து 8927 புள்ளிகளாகவும் இருந்தன. எஸ்பிஐ, மாருதி சுசுகி, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. அதேசமயம் அதானி போட்ஸ், ஓஎன்ஜிசி, விப்ரோ, கெயில், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|