பதிவு செய்த நாள்
09 மார்2017
23:52
பெர்லின் : கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, அக்பர் அல் பக்கர் கூறியதாவது: இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில், கால் பதிக்க, கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கத்தார் ஏர்வேஸ், கத்தார் அரசு முதலீட்டு நிதியத்துடன் இணைந்து, 100 சதவீத முதலீட்டில், இந்தியாவில் விமான நிறுவனத்தை அமைக்கும். இதற்கான அனுமதி கோரி, விரைவில் மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க உள்ளோம். மத்திய அரசு, விமானப் போக்குவரத்துத் துறையில், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து, இந்தியாவில் கால் பதிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது, வெளிநாட்டு விமான நிறுவனங்கள், இந்திய விமான நிறுவனங்களில், 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய விமானத் துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளும் வகையில், கடந்த ஆண்டு, ஜூன் மாதம், விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து, முதன்முதலாக, கத்தார் ஏர்வேஸ், இந்தியா விமானப் போக்குவரத்து சேவையில் நுழைய உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|