பதிவு செய்த நாள்
09 மார்2017
23:53
மும்பை : பார்லே அக்ரோ, ‘புரூட்டி, ஆப்பி பிஸ்’ என்ற பெயர்களில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழச்சாறு விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், பழச்சாறு விற்பனையை அதிகரிப்பதன் மூலம், மொத்த வருவாயை இரு மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் நதியா சவுகான் கூறியதாவது: நிறுவனம், 2005ல், ஆப்பி பிஸ் எனும், கார்பனேட்டட் பழச்சாறை அறிமுகம் செய்தது. இதற்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. தற்போது, எங்கள் வருவாய், 2,800 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இதை, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 5,000 கோடி ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆப்பி பிஸ் போலவே, புரூட்டி பிஸ் எனும் கார்பனேட்டட் மாம்பழ சாறையும் அறிமுகம் செய்துள்ளோம்.
பழங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் பானங்களின் சந்தை மதிப்பு, 6,000 கோடி ரூபாய் ஆகும். இந்த பானங்களில், 90 முதல் 95 சதவீத பங்கு, மாம்பழ பானங்கள் வசமே இருக்கின்றன. இந்த பிரிவில் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|