பதிவு செய்த நாள்
09 மார்2017
23:55
சென்னை : வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவையை இன்னும் எளிதாக்குவதற்காக, மூன்று புதிய தொழில்நுட்ப சேவைகளை அறிமுகம் செய்துள்ளது, கரூர் வைஸ்யா வங்கி.‘பாஸ்டேக், யூனிபைடு பேமென்ட் இன்டர்பேஸ் மற்றும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்’ என, மூன்று தொழில்நுட்ப சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து, கரூர் வைஸ்யா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:பாஸ்டேக்: சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, இந்த சேவை உதவும். சுங்கச்சாவடிகளிலுள்ள சென்சார்கள் வழியாக, சுங்க வரியானது தானாகவே நம் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். இந்த வசதி, நாடு முழுக்க செல்லுபடியாகும். கரூர் வைஸ்யா வங்கி தான், இந்த சேவையை தென் மாநிலத்திலிருந்து வழங்கும் முதல் வங்கியாகும்.அதே போல், யுனைடெட் பேமென்ட்ஸ் இன்டர்பேஸ் என்பது, ஸ்மார்ட் போன்கள் மூலமாக, 24 மணி நேரமும் வங்கிகளுக்கிடையே பணப் பரிமாற்றம் செய்ய, வாடிக்கையாளர்களுக்கு உதவும் ஒரு மொபைல் செயலியாகும். பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் எனும் சேவையின் மூலம், மின்சாரம், எரிவாயு, டி.டி.எச்., போன்றவற்றுக்கான கட்டணங்களை எளிதாக செலுத்த முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|