பதிவு செய்த நாள்
09 மார்2017
23:56
ஐதராபாத் : ஐ.சி.ஏ.ஐ., எனப்படும் இந்தியச் செலவு கணக்கியல் கல்வி மையத்தின் தலைவர், மனஸ் குமார் தாகுர் கூறியதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தை, ஜூலை, 1 முதல் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வரி குறித்து, வணிகர்களுக்கு பயிற்சி அளிக்கும் உரிமையை, ஐ.சி.ஏ.ஐ., பெற்றுள்ளது. தற்போது, 400 வணிகர்களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைகள் குறித்து, பயிற்சி அளித்துள்ளோம். அடுத்த ஓராண்டில், 15 லட்சம் வணிகர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
தற்போது, 22 லட்சம் வணிகர்கள், மறைமுக வரி செலுத்துகின்றனர். இது, ஜி.எஸ்.டி., அமலானால், 70 லட்சமாக உயரும். இதையொட்டி, புதிய வரி திட்ட நடைமுறைகள், வரி படிவங்களை பூர்த்தி செய்வது உள்ளிட்டவற்றில், வணிகர்களுக்கும், புதியவர்களுக்கும் பயிற்சி அளிக்கத் துவங்கியுள்ளோம். அத்துடன், ஜி.எஸ்.டி., பயிற்சியாளர்களையும் உருவாக்க உள்ளோம். அவர்கள் மூலமாகவும், வணிகர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|