இல்லத்தரசிகளுக்கு ‘ஏசி’ சாதனங்கள் இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகம்இல்லத்தரசிகளுக்கு ‘ஏசி’ சாதனங்கள் இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகம் ... புதிய ஜி.எஸ்.டி., திட்டத்தில்... 240 தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் புதிய ஜி.எஸ்.டி., திட்டத்தில்... 240 தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ...
அந்தமானில் தொழில் துவங்க வாருங்கள்! அரசியல்வாதிகளுக்கு கமிஷன் தர தேவையில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2017
23:44

சென்னை : ‘அந்­த­மான் தீவு­களில், தொழில் துவங்க வாருங்­கள்; அங்கு, அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு கமி­ஷன் தர தேவை­யில்லை’ என, அந்­த­மான் யூனி­யன் பிர­தே­சம், தமி­ழக முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்­ளது.
சென்­னை­யில், ‘அந்­த­மான் தீவு­கள்: சிறப்­பான அமை­வி­டம் மற்­றும் வளர்ச்­சிக்­கான வாய்ப்­பு­கள்’ என்ற தலைப்­பில், நேற்று கருத்­த­ரங்­கம் நடந்­தது. ‘பாரத் நிதி’ என்ற அமைப்பு நடத்­திய இக்­க­ருத்­த­ரங்­கில், அந்­த­மான் துணை நிலை கவர்­னர் ஜக்­திஷ் முகி பேசி­ய­தா­வது: தென்­கி­ழக்கு ஆசிய நாடு­களில் வர்த்­தக வாய்ப்­பு­களை, இந்­தியா பெருக்­கு­வ­தற்கு, அந்­த­மான் உத­வி­க­ர­மாக இருக்­கும்; இப்­பி­ராந்­தி­யத்­தில், சீன ஆதிக்­கத்தை தடுக்­க­வும் உத­வும். இங்கு, மாலத்­தீ­வு­கள், செஷல்ஸ் போன்ற நாடு­களை விட, அதிக மக்­கள் வாழ்­கின்­ற­னர். இயற்கை எழி­லும் நிறைந்­துள்­ள­தால், அந்த நாடு­களை விட, சுற்­று­லா­வில் சிறந்து விளங்க வாய்ப்பு உள்­ளது. மேலும், கேர­ளா­விற்கு அடுத்­த­ ப­டி­யாக, அதிக கல்­வி­ய­றிவு, தனி­ந­பர் வரு­மா­னம், துாய்மை­யான சூழல் போன்ற கார­ணங்­க­ளால், முத­லீட்­டுக்கு உகந்த இட­மாக இருக்­கும்.இவ்­வாறு அவர் பேசி­னார்.
அந்­த­மான் எம்.பி., விஷ்­ணு ­பாத ராய் பேசி­ய­தா­வது: அந்­த­மா­னில், நிலப்­ப­ரப்பு அதி­கம் என்­ப­தால், 100 சிங்­கப்­பூர்­களை அங்கு உரு­வாக்­க­லாம். அங்கு, தமி­ழர்­கள் மிக அதி­கம். ஒரு குட்டி இந்­தியா போல், அனைத்து மதத்­த­வ­ரும் ஒற்­று­மை­யாக வாழ்­கின்­ற­னர். அங்கு அர­சி­யல்­வா­தி­கள், கமி­ஷன் கேட்­க­மாட்­டர்; சட்­டம் – ஒழுங்கு பிரச்னை கிடை­யாது. எனவே, தொழில் துவங்க வாருங்­கள். இவ்­வாறு அவர் பேசி­னார்.
பா.ஜ., தேசிய பொதுச் செய­லர் முர­ளி­தர ராவ் கூறு­கை­யில், ‘‘அந்­த­மான் வழி­யாக, சோழ மன்­னர்­கள் கடல் கடந்து வென்­ற­னர். இந்­தி­யா­வின் நுழை­வா­யில் போன்ற அதன் முக்­கி­யத்­து­வத்தை, மோடி உணர்ந்­துள்­ளார். ராணுவ தள­வா­டங்­கள் தயா­ரிக்க, அது பொருத்­த­மான இடம்,’’ என்­றார்.
நிகழ்ச்­சி­யில், பா.ஜ., மாநில தலை­வர் தமி­ழிசை சவுந்­த­ர­ரா­ஜன், ‘பாரத் நிதி’ தேசிய ஒருங்­கி­ணைப்­பா­ளர் அனுாப் கைப்­பள்ளி உள்­ளிட்­டோர் பேசி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)