பதிவு செய்த நாள்
12 மார்2017
00:28
புதுடில்லி: ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம், துத்தநாக பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ராஜஸ்தானில், 570 கோடி ரூபாய் செலவில், துத்தநாகம் தயாரிப்பிற்கான நவீன ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள, சில நிறுவனங்கள் மட்டுமே துத்தநாகத்தை உற்பத்தி செய்ய நவீன ஆலைகளை அமைத்துள்ளன. எங்கள் நிறுவனம், 570 கோடி ரூபாய் திட்ட செலவில், ராஜஸ்தானில், அத்தகைய ஆலையை அமைக்க உள்ளது. இதனால், சீனாவைச் சேர்ந்த, நான்பெரஸ் மெட்டல் இண்டஸ்ட்ரி நிறுவனம், எங்கள் நிறுவனத்திற்கு, ‘ஆர்டர்’ வழங்க கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளது. ராஜஸ்தானில் அமைய உள்ள ஆலை, உலோக கழிவுகளிலிருந்து ஆண்டுக்கு, 3,000 டன் திறனுள்ள, துத்தநாகத்தை தயாரிக்கும் திறனுடையது. மேலும், துத்தநாக தயாரிப்பின் போது ஏற்படும் கழிவுகள், சிமென்ட் துறையினரால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இயலும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|