பதிவு செய்த நாள்
14 மார்2017
00:00
புதுடில்லி : இந்தியா, ஆண்டுக்கு, 75 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிற்கு, சரக்கு மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்து வருகிறது; இது, சர்வதேச நாடுகளின் வர்த்தகத்தில், 2 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. இதை, 2020ல், 3.5 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதையொட்டி, ஏற்றுமதி – இறக்குமதி சார்ந்த பணிகளை கவனிக்கும், அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட, பிராஸ்ட் அண்டு சலிவன் நிறுவனம், அதன் அறிக்கையை, மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அதை, மத்திய வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
‘ஏற்றுமதியை மேம்படுத்த, குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் வளர்ச்சிக்கு, இதர தென் கிழக்கு ஆசிய நாடுகளை போல, வலுவான, சுதந்திரமான, அன்னிய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு நமக்கு தேவை. அதற்கான நடவடிக்கையை, ஆய்வறிக்கையின் அடிப்படையில், வர்த்தக அமைச்சகம் எடுக்கும்’ என, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|