பதிவு செய்த நாள்
14 மார்2017
00:01
புதுடில்லி : ‘ஊபர்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: நிறுவனம், அதன் வாடகை கார் ஓட்டுனர்களை கண்காணித்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, ‘ரியல் ஐ.டி., செக்’ எனும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.இதன்படி, நிறுவனம், திடீரென, ஓட்டுனரின் மொபைல்போனில், ‘செல்பி’ புகைப்படத்தை அனுப்ப உத்தரவிடும்; அதற்கும், அவர் ஏற்கனவே ஒப்பந்த விண்ணப்பத்தில் அளித்திருந்த புகைப்படத்திற்கும் வேறுபாடு இருந்தால், அந்த ஓட்டுனரின் கணக்கு, உடனடியாக முடக்கப்படும்.
இதன் மூலம், நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ள ஓட்டுனர்கள்தான், வாடகை கார் சேவையில் உள்ளனரா என்பதை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.இந்த புதிய நடைமுறை, மார்ச் 20ல், டில்லி, பெங்களூரு உள்ளிட்ட ஐந்து நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விரைவில், மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வாடகை கார் ஓட்டுனர்கள், பயணிகளிடம் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, இத்தகைய கண்காணிப்பு வசதியை, ஊபர் அறிமுகப்படுத்த உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|