பதிவு செய்த நாள்
14 மார்2017
10:26
மும்பை : நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் உ.பி., மாநிலத்தில் பா.ஜ., அரசு வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர உத்தரகண்ட் மாநிலத்திலும் ஆட்சி அமைத்துள்ளது. கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் ஆட்சியமைக்க கோரியுள்ளது. பா.ஜ., கட்சிக்கு கிடைத்த அமோக வெற்றி காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் அதிகளவில் ஏற்றம் கண்டுள்ளன. அதிலும் இந்தாண்டில் இல்லாத அளவுக்கு அளவுக்கு சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்துள்ளன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 616 புள்ளிகள் உயர்ந்து 29,561.93-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 145.70 புள்ளிகள் உயர்ந்து 9 ஆயிரம் புள்ளிகளை கடந்து 9,080.25-ஆக வர்த்தகமாகின.
மேலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்ததும் இன்றைய வர்த்தகம் அதிகளவில் உயர முக்கியமான காரணமாக அமைந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|