பதிவு செய்த நாள்
16 மார்2017
00:37
புதுடில்லி : சீனா, ஈரான், கத்தார் நாடுகளில் இருந்து, இறக்குமதியாகும் சலவை சோப்பு தயாரிப்புக்கு பயன்படும் ரசாயனங்களுக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உள்நாட்டில், பல நிறுவனங்கள், ரசாயன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றை, சலவை சோப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. ரசாயன பொருட்களின் விலை, மற்ற நாடுகளில் குறைவாக உள்ளது. இதனால், செலவை குறைக்க, சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து, லீனியர் அல்கைல் பென்சீன் போன்ற ரசாயன பொருட்களை இறக்குமதி செய்வதால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.
இதையடுத்து, இறக்குமதி செய்யப்படும் சலவை சோப்புக்கான ரசாயனங்கள் மீது, பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதிக்குமாறு, உள்நாட்டு நிறுவனங்கள், அந்த வரி விதிப்புக்கான இயக்குனரகத்துக்கு கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, சீனா, ஈரான், கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும், ஒரு டன் சலவை சோப்புக்கான ரசாயனத்துக்கு, 300.22 டாலர், பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது, அந்த வரி, டன்னுக்கு, 23.78 டாலர் என்றளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|