பதிவு செய்த நாள்
16 மார்2017
00:38
மும்பை : எஸ்.பி.ஐ., 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான, டிராக்டர் கடன்களுக்கான தீர்வு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
டிராக்டர் கடனை வாங்கி அடைக்க முடியாதவர்களுக்காக, கடன் தீர்வு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாகவும், அதன்படி, மார்ச், 31க்குள் வங்கி கிளையை அணுகி, கடனை பைசல் செய்து கொள்ளலாம் எனவும், எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
இது குறித்து, மீடியாக்களிடம், வங்கியின் நிர்வாக இயக்குனர் ரஜினிஷ் குமார் கூறியதாவது:இத்திட்டத்தின் மூலமாக, 2016 செப்., வரையிலான திருப்பிச் செலுத்தப்படாத டிராக்டர் கடன் சுமையில், 40 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கிறோம். விவசாயிகளுக்கு இதுவரை, 1 லட்சத்து, 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை, கடன் வழங்கி உள்ளோம். அதில் டிராக்டர் கடனின் பங்கு, 6,000 கோடி ரூபாய் ஆகும். 2016 செப்., மாதத்தின்படி, செலுத்தப்படாத கடன்கள், 2011 செப்டம்பருக்கு முன் வழங்கப்பட்டதாகும். இந்த கடன் தீர்வு திட்டத்துக்கும், பிரதமர் மோடியின் உத்தர பிரதேச விவசாயிகள் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கும் சம்பந்தம் இல்லை.
இதற்கு முன் கூட, 2016 டிசம்பரில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான கடன் தீர்வு சலுகை திட்டத்தை அறிவித்தோம். அதே போல், கல்விக் கடனுக்கான கடன் தீர்வு திட்டத்தை, கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிவித்தோம். அதே போன்று தான், இப்போது, இந்த டிராக்டர் கடன் தீர்வு திட்டத்தையும் அறிவித்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|