பதிவு செய்த நாள்
16 மார்2017
00:39
புதுடில்லி : டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:நிறுவனம், அதன் பல்வேறு பிரிவுகளை சீரமைத்து, பொதுவான சேவைகளை ஒரே மையத்தின் கீழ் ஒருங்கிணைக்க திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம், நிறுவனம் முழுவதிலும் உள்ள, பல்வேறு பிரிவுகளின் பணிகளை திறம்பட கையாள முடியும் என்பதுடன், செலவினங்களும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, நிறுவனத்தின் நிர்வாக பிரிவில், இரு உச்ச நிலை பதவிகளில் உள்ளோருக்கு, விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு, இயக்குனர் குழுவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில், 60 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இந்நிறுவனம், ஏற்கனவே, 2015ல், இது போன்ற விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. தற்போது, 500 பேருக்கு விருப்ப ஓய்வு வழங்க உள்ளதாக, அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|