பதிவு செய்த நாள்
16 மார்2017
00:39
புதுடில்லி : சர்வதேச அளவில், உயர்ந்த நெறிகளை கடைபிடித்து, சமூக முன்னேற்றத்திற்கும், வர்த்தக மேம்பாட்டிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வரும் நிறுவனங்களின் பட்டியலை, அமெரிக்காவின் எடிஸ்பியர் இன்ஸ்டிடியூட் வெளியிட்டு உள்ளது. அதில், உலோகம், கனிமம் மற்றும் சுரங்கத் துறையில், டாடா ஸ்டீல், அமெரிக்காவின் ஷினிட்சர் ஸ்டீல் இண்டஸ்ட்ரிஸ் ஆகிய, இரு நிறுவனங்கள் தேர்வாகியுள்ளன.
தகவல் தொழில்நுட்ப துறையில், இந்தியாவின் விப்ரோ நிறுவனமும், அமெரிக்காவின் ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.‘இந்நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள், முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை ஆராய்ந்து, அவ்வாறு இல்லாதபட்சத்தில் தான், முடிவுகளை எடுக்கின்றன. நிறுவனத்தின் பாரம்பரியம், மதிப்பு உள்ளிட்ட அம்சங்களை, கவனத்தில் கொண்டே, அன்றாட நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றன’ என, எடிஸ்பியர் இன்ஸ்டிடியூட் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தாண்டு, 19 நாடுகளில், 52 தொழில் துறைகளைச் சேர்ந்த, 124 நிறுவனங்கள், உயர்ந்த நெறியாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 98 நிறுவனங்கள், அமெரிக்காவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|