பதிவு செய்த நாள்
16 மார்2017
00:40
மும்பை : நிதிச் சேவையில் ஈடுபட்டு வரும், டாடா கேப்பிடல் நிறுவனம், இந்தியாவில் முதன்முறையாக, திருமண கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
இந்நிறுவனம், திருமண கடன் குறித்து, வலைதளத்தில் ஆய்வு நடத்தியது. இதில், நாடு முழுவதிலும் இருந்து, பிரம்மச்சாரிகள், திருமணம் புரிய உள்ளோர், திருமணமானோர் கலந்து கொண்டனர்.ஆய்வில் பங்கேற்ற, 2,500 பேரில், 58 சதவீதத்திற்கும் அதிகமானோர், தங்கள் திருமணத்திற்காக, கடன் வாங்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.மூன்றில் இரு பங்கினர், திருமணத்தை எளிமையாக நடத்த உள்ளதாக கூறியுள்ளனர். சராசரியாக, 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாக, திருமணத்திற்கு செலவு செய்ய திட்டமிட்டு உள்ளதாக, 74 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
திருமண உடை, நகை உள்ளிட்டவற்றுக்கான செலவுகளுடன், குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் ஆகியோருக்கும், தேன்நிலவு கொண்டாட்டங்களுக்கும், கணிசமான தொகையை செலவழிக்க உள்ளதாக, 66 சதவீதத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.திருமண செலவு, தங்கள் பட்ஜெட்டை தாண்டிப் போகும் என, 27 சதவீதம் பேர் கவலை தெரிவித்து உள்ளனர்.
தங்கள் திருமண செலவு முழுவதற்கும் அல்லது குறிப்பிட்ட செலவுகளுக்கு மட்டும் கடன் பெற போவதாக, 58 சதவீதத்தினர் கூறியுள்ளனர். ஒருசில நிதி நிறுவனங்களில், திருமணத்திற்கு கூட கடன் கிடைக்கும் என்பது தெரியாததால், வாய்ப்பை தவற விட்டதாக, 44 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|