கிரெடிட் கார்டு சைஸில் ஈ.சி.ஜி., மெஷின் - இந்திய விஞ்ஞானிகள் சாதனைகிரெடிட் கார்டு சைஸில் ஈ.சி.ஜி., மெஷின் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை ... வீடு வாங்க இனி பிஎப்., கணக்கிலிருந்து 90 % சதவீதம் வரை பணம் எடுக்கலாம் வீடு வாங்க இனி பிஎப்., கணக்கிலிருந்து 90 % சதவீதம் வரை பணம் எடுக்கலாம் ...
ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2017
14:16

திருப்பூர்: 'தபால் அலுவலகங்களில், 50 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கினால், பாஸ் புக் மற்றும் ஏ.டி.எம்., கார்டு பெறலாம்; பணம் எடுக்க கட்டுப்பாடுகளோ, கட்டணமோ கிடையாது' என்று, தபால் துறை அறிவித்துள்ளது. பண பரிவர்த்தனை செய்யவும், ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்கவும், வங்கிகள் விதிக்கும் அடுத்தடுத்த கட்டுப்பாடுகளால், வாடிக்கையாளர்கள் கவலைஅடைந்துள்ளனர்.

கணக்கு துவக்கலாம் : இதற்கு மாறாக, நலிவடைந்துள்ள தபால் துறையோ, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், எவ்வித சேவை கட்டணமுமின்றி, வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர முன்வந்துள்ளது. அதன்படி, குறைந்தபட்சம், 50 ரூபாய் செலுத்தி, தபால் அலுவலகங்களில் கணக்கு துவக்கலாம்; பாஸ் புக், ஏ.டி.எம்., கார்டு பெற்று, பண பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், சேவூர் தபால் நிலைய துணை தபால் அதிகாரி சுப்ரமணியம் கூறியதாவது: தபால் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, எந்த தபால் நிலையத்திலோ, பிற வங்கி ஏ.டி.எம்.,களிலோ பணம் எடுக்கலாம்.

கட்டணம் கிடையாது : ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்; அல்லது எடுக்கலாம். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். வங்கிகளை போலவே, தபால் நிலைய சேமிப்பு கணக்குக்கு, 4 சதவீதம் வட்டி வழங்கப்படும். 'போஸ்ட் பேமென்ட் பாங்கிங்' என்ற புதிய திட்டத்தில், 4.5 சதவீதம் முதல், 5.5 சதவீதம் வரை, 'டிபாசிட்' வட்டியை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக, தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)