பதிவு செய்த நாள்
16 மார்2017
23:54
புதுடில்லி : கடந்த பிப்ரவரியில், நாட்டின் பாமாயில் இறக்குமதி, 7.36 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளதாக, எண்ணெய் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இந்தியா, அதிகளவில் பாமாயில் இறக்குமதி செய்கிறது. கடந்த பிப்ரவரியில், நாட்டின், பாமாயில் இறக்குமதி, 7.36 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, 2016ம் ஆண்டின் இதே மாதத்தில், 5.95 லட்சம் டன்னாக குறைந்திருந்தது. இதே கால ஒப்பீட்டில், தாவர எண்ணெய் இறக்குமதி, 17 சதவீதம் உயர்ந்து, 10.82 லட்சம் டன்னில் இருந்து, 12.70 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், பாமாயிலின் பங்கு, 63 சதவீதம் என்றளவில் உள்ளது.
பாமாயிலில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி, 1.77 லட்சம் டன்னில் இருந்து, 2.33 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. கச்சா பாமாயில் இறக்குமதி, 4.08 லட்சம் டன்னில் இருந்து, 4.98 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரியில், கடுகு எண்ணெய் இறக்குமதி, 36 ஆயிரத்து, 886 டன்; சோயா எண்ணெய் இறக்குமதி, 2.51 லட்சம் டன்னாக உள்ளது. இவற்றின் இறக்குமதி, கடந்த ஆண்டு முறையே, 17 ஆயிரத்து,336 டன்; 3.66 லட்சம் டன்னாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|