பதிவு செய்த நாள்
17 மார்2017
15:32
புதுடில்லி : ஏற்கனவே விற்பனையில் மந்தமடைந்துள்ள ஏறக்குறைய 12 கார்களின் உற்பத்தியை நிறுத்த இந்திய ஆட்டோமேடிவ் ஒழுங்குமுறை கழகம் முடிவு செய்துள்ளது.
மாசு கட்டுப்பாடு, திருத்தப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் கார்களில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற விதிகள் கொண்டு வரப்பட உள்ளன. மாருதி சுசுகி நிறுவனம் ஏற்கனவே தனது ரிட்ஸ் மாடல் கார் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதே போன்ற அறிமுகம் செய்து பல ஆண்டுகள் ஆன இண்டிகா மாடல் உற்பத்தியை நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் ஐ 10 மாடலையும், ஹோண்டா நிறுவனம் மொபிலியோ மாடலையும் நிறுத்தி உள்ளன.
இந்த வரிசையில் செவர்லட் டவேரா, நிஸ்ஸான் மைக்ரா, மகேந்திரா சைலோ, டாடா நானோ உள்ளிட்ட 12 கார் மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட உள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மான்சா, விஸ்டா, ஏரியா, மோவஸ், இண்டிகோ, நானோ, இண்டிகா, வென்சர் உள்ளிட்ட கார் மாடல்களின் உற்பத்தியை ஏற்கனவே நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய விதிமுறைகள், தர உயர்வு உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக உருவாக்கி அக்டோபர் மாதத்திற்கு பிறகே அனைத்து கார்களும் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாகவே மந்தமாக விற்பனையாகும் கார் மாடல்களின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது.
மாருதி நிறுவனம் அடுத்த தலைமுறை சிவிப்ட் காரையும், அடுத்த தலைமுறை ஆல்டோ காரையும் 2019 ல் அறிமுகம் செய்ய உள்ளது. மகேந்திரா நிறுவனமும் கூடுதல் இருக்கை வசதி கொண்டதாக சைலோ மாடல் காரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. டாடா மோட்டாஸ் நிறுவனமும் புதிய தலைமுறை மாடல்களான டியாகோ, டிகோர், நெக்சான், ஹெக்சா உள்ளிட்ட கார்களை ஆண்டுக்கு 2 வீதம் புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|