பதிவு செய்த நாள்
17 மார்2017
23:45
மும்பை : துபாய் வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பினர், மஹாராஷ்டிராவில் உள்ள மும்பையில், முதல் அலுவலகத்தை துவக்க முடிவு செய்துள்ளனர்.
துபாய் நாட்டைச் சேர்ந்த, வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு தலைவர் மஜித் சாயிப் அல் குராய்ர், ஐக்கிய அரபு நாடுகளின் துாதர் அகமத் அல் பானா ஆகியோர், மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிசை சந்தித்து பேசினர். அப்போது, மும்பை – துபாய் இடையில், தொழில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்து உள்ளனர்.
இது கூறித்து, துபாய் தொழில் கூட்டமைப்பினர் கூறியதாவது:சர்வதேச அளவில், வியாபாரம் செய்வதற்கான முக்கிய மையமாக, துபாய் உள்ளது. எங்கள் அமைப்பில் உள்ள பலர், இந்தியா உடன், வியாபார தொடர்பை கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்தும், அதிக உறுப்பினர்கள் உள்ளனர். அமைப்பில், கடந்த ஆண்டில் பதிவு செய்த புதிய நிறுவனங்களில், 29 சதவீதம் இந்திய நிறுவனங்கள் ஆகும். மொத்தம், 36 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவில், எங்கள் கூட்டமைப்பின் முதல் அலுவலகத்தை, மஹாராஷ்டிராவில் உள்ள மும்பையில், இந்த ஆண்டு இறுதியில் அமைக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|