பதிவு செய்த நாள்
17 மார்2017
23:46
மெல்போர்ன் : அதானி குழுமம், ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாநிலத்தில், சார்மிசல் பகுதியில், நிலக்கரி சுரங்க திட்டத்தை மேற்கொள்ள உள்ளது.
அரசு அனுமதியுடன், 2,170 கோடி டாலர் முதலீட்டில் செயல்படுத்த உள்ள, இத்திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இயன் சேப்பல், கிரேக் சேப்பல் உள்ளிட்ட பிரபலங்கள், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதன் விபரம்: இத்திட்டம், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன், இந்தியா – ஆஸி., நல்லுறவையும் பாதிக்கும். இரு நாடுகளுக்கும் கிரிக்கெட் விளையாட்டில், நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் அடிப்படையில், இந்த பிரச்னையை, உணர்வுபூர்வமாக அணுகி தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதானி குழுமத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இத்திட்டத்தை, உள்நோக்கத்துடன், ஒருசிலர் எதிர்க்கின்றனர்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|